×

அம்பையில் மார்கழி மாத பஜனை குழுக்கள் சங்கமம்

அம்பை, ஜன. 13:  அம்பையில் மார்கழி மாத பஜனை குழுக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். அம்பை சுற்றுவட்டார பகுதி கோயிகளில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். பஜனை குழுவினர் பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைவர். இந்நிகழ்ச்சி டிச.17 முதல் ஜன.15ம்தேதி வரை நடைபெற்று வருகிறது. அம்பையிலுள்ள 23 கோயில்களில் நடைபெற்று வரும் பஜனை குழுக்கள் கூடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 750 பேர் ஒன்று கூடி தனித்தனியாக பஜனை பாடும் நிகழ்ச்சி நடந்தது. பஜனைகுழுக்களை வழிநடத்திய பொறுப்பாளர், நடத்துனர்கள் கவுரவிக்கப்பட்டதுடன், குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆறுமுகம், சுரேஷ், மாரியப்பன், கார்த்திக் உள்ளிட்ட பஜனை சங்கம குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Morgani Monthly Baja Groups Association ,
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை