×

சங்கரன்கோவிலில் பைக்குகள் மோதலில் டிரைவர் பரிதாப பலி

சங்கரன்கோவில், ஜன. 13: சங்கரன்கோவிலில் பைக்குகள் மோதலில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சொக்கநாச்சியார்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பழனிசாமி (38).  கார் டிரைவரான இவர் சம்பவத்தன்று சங்கரன்கோவில் அடுத்த தேவர்குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குசென்றுவிட்டு பைக்கில் விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சங்கரன்கோவில்- நெல்லை சாலையில் உள்ள வளைவில் வந்தபோது எதிரே சங்கரன்கோவில் காந்திநகர்   4ம் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வெங்கடேஷ் என்பவர் ஓட்டிவந்த பைக்கும், இவரது பைக்கும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேஷ் நெல்லை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : killing ,Sankarankoil ,
× RELATED எருது விடும் விழா கோலாகலம்