×

நெல்லை அருகே மணல் கடத்திய வாலிபர் கைது

நெல்லை, ஜன. 13:  நெல்லை அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை அருகே கங்கை  கொண்டான் 4 வழிச்சாலையில் எஸ்ஐ சிவசங்கர் மற்றும் போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் எவ்வித ஆவணங்களும் இல்லாததோடு, மணல்  கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், மணலோடு லாரியை பறிமுதல் செய்ததோடு லாரியை ஓட்டிவந்த  கங்கைகொண்டான், ஆலடிபட்டி காலனியை சேர்ந்த குமார் மகன் கசமாடன் (23)  என்பவரை கைது செய்தனர்.

Tags : paddy ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...