×

கூலமேட்டில் 18ம் தேதி நடக்கிறது ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆயத்த பணிகள் தீவிரம்

ஆத்தூர், ஜன.13:ஆத்தூர் அருகேயுள்ள கூலமேடு கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தேவையான ஆயத்தப்பணிகளில் பொதுமக்கள் தீவிரமாக நடந்து வருகின்றனர். ஆத்தூர் அருகேயுள்ள கூலமேடு கிராமத்தில், பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு வரும் 18ம் தேதி கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். கூலமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் காலி மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கம் மற்றும் காளைகளின் ஓடுதளம், மாடு பிடிக்கும் பகுதிகளுக்கான தடுப்புவேலிகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விழாவில் பங்கேற்க தகுதியான காளைகளின் பதிவு உள்ளிட்ட பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags : Jallikattu Competition ,
× RELATED புதுக்கோட்டை அருகே கருப்பர் கோயில்...