பள்ளிபாளையம், ஜன.13: பள்ளிபாளையம் பகுதியில் குழாய் பதிக்க வெட்டிய பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியது. இதனால் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். பள்ளிபாளையம் காகித ஆலை காலனி மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டின் ஒரு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. கடந்த 6 மாதமாக குடிநீர் வெளியேறியது. இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. இதனால் சாலையின் குறுக்கே முழுமையாக சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இச்சாலை வழியாக இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகனங்கள் விழுந்து கரணமடிக்கின்றன. இது குறித்து பொது நலன் கருதி சுட்டிகாட்டியும் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அரசு பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் சிக்கியது. நீண்ட நேரம் போராடியும் சக்கரத்தை பள்ளத்திலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. வேறு வழியின்றி பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவ்வழியாக பேருந்துகள் சிறு வாகனங்களும் செல்ல முடியவில்லை.
எனவே, உயிர்பலி ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் பள்ளத்தை சீர்செய்ய வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.