×

கடிதம் எழுதி வைத்து விட்டு ஓட்டம் கணவன் சந்தேகப்பட்டதால் மாயமான இளம்பெண்

சேந்தமங்கலம், ஜன.13: கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளம்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டிலிருந்து மாயமானார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இளம்பெண்ணை திருப்பூரில் மீட்டனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பேளுக்குறிச்சி பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஜோதிகண்ணன் (30). தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 5 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா (26) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் நடந்து 5 வருடமாக தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்நது. ஜோதிக்கண்ணனுக்கு கடந்த சில மாதங்களாக பிரவீனா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரவீனா மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஜோதிக்கண்ணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது, பிரவீனா வீடடில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் தேடியும் பிரவீனா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
வீட்டில் ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், பிரவீனா ‘நான் உனக்கு சரியான மனைவி இல்லை. இதனால் நான் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை எங்கும் தேட வேண்டாம்” என எழுதியிருந்தார். அதனை படித்துவிட்டு பதறிய ஜோதி கண்ணன், இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் எஸ்.ஐ. சங்கீதா தலைமையிலான போலீசார் காணாமல் போன பிரவீனாவை தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம்  செல்போன் சிக்னல் மூலம் அவர் திருப்பூரில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு அங்கு சென்ற போலீசார்  அவரது உறவினர் வீட்டில் இருந்த பிரவீனாவை மீட்டு பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜோதிகண்ணன் அடிக்கடி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததால் மனமுடைந்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு