×

திருச்செங்கோட்டில் எஸ்ஐ பணிக்கான எழுத்துதேர்வு

நாமக்கல், ஜன.13: திருச்செங்கோட்டில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதற்காக விண்ணப்பித்த 2618 நபர்களில் 699 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல்படை காவலர் பணிக்கான எழுத்துதேர்வு நேற்று நாமக்கல் மாவட்ம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 2618 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 699 பேர் தேர்வு எழுதவரவில்லை. 1911 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு நடைபெறுவதை சமூகநீதி மற்றும் பாதுகாப்பு பிரிவு டிஐஜி லட்சுமி நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலை 10 மணிக்கு துவங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் மற்றும் மின் சாதன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேர்வையொட்டி நாமக்கல், பரமத்திவேலூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags : SI missions ,Tiruchengode ,
× RELATED மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து