×

ஏடிஎம் கண்ணாடி உடைத்தவர் கைது

சென்னை, ஜன.13: சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தை, ேநற்று முன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். இதை பார்த்த ஏடிஎம் மைய காவலாளி அந்த நபரை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால், ஆத்திர மடைந்த அவர், சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். காவலாளி, அந்த நபரை பிடித்து அண்ணசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை நடைபாதையில் வசித்து வரும் யுவன் (35) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : ATM ,glass breaker ,
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...