×

தனியார் நிறுவனத்தில் ராட்சத மெஷின் விழுந்து வெல்டர் சாவு: மீஞ்சூர் அருகே சோகம்

பொன்னேரி, ஜன. 13: மீஞ்சூர் அடுத்த கே.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் வெல்டராக  வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென மேலே இருந்த ராட்சத மெஷின் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு சக ஊழியர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...