×

பெட்ரோல் பங்க்கில் துணிகர கொள்ளை

திருப்போரூர், ஜன. 13:  திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று மாலை 5 மணியளவில் 3 பெண், 2 ஆண் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பெட்ரோல் போட்டனர். பெண் ஊழியர்கள் பணம் கேட்டபோது, தன்னிடம் பணம் இல்லையென்றும் ஏடிஎம்மில் எடுத்து தருவதாகவும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்க வந்த ஆண் ஊழியரை 3 பேரும் சேர்ந்து தாக்கினர். ஊழியர்கள் திரண்டதால் பெண் ஊழியரின் கையில் இருந்த பணப்பையுடன் தப்பினர். இதையடுத்து பங்க் உரிமையாளர் வைத்தியநாதன் திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ பன்னீர்செல்வம் பங்கில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்து 3 வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். ஊழியரின் பையில் சுமார் ₹10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...