×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ரவுடிகள் அதிரடி கைது: எஸ்.பி நடவடிக்கை

காஞ்சிபுரம், ஜன. 13: காஞ்சிபுரம் தற்போது ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறிவிட்டது. காஞ்சிபுரத்தில் ரவுடிகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பிரபல ரவுடி தர் மறைவுக்கு பிறகு அவரது மைத்துனர் தணிகா மற்றும் தரின் கார் ஓட்டுநர் தினேஷிற்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி காரணமாக இரண்டு கோஷ்டிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதும் கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபடுவதும் அடிக்கடி காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி சாமுண்டீஸ்வரி  உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் வேட்டையை அதிரடியாக தொடங்கினர்.

அதன்படி மறைந்த தாதா தரின் ஓட்டுனர் தினேஷ் மற்றும் மைத்துனர் தணிகா மற்றும் தியாகு ஆகியவர்களின் கூட்டாளிகளான பிரபல ரவுடிகளை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 15 பிரபல ரவுடிகளை நேற்று முன்தினம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் பெரிய காஞ்சிபுரம் உப்பேரிகுளம் பகுதியை சேர்ந்த நாட்டு வெடிகுண்டு வீசுவதில் கைதேர்ந்த சேக் காதர் என்பவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : raids ,Kanchipuram district ,SP ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...