×

காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயம்: போலீஸ் விசாரணை

சென்னை, ஜன. 13: சென்னை  நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் மாயமாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் தனியார் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு கோவையை சேர்ந்த சோபிகா (17), எம்எம்டிஏ காலனி முத்தமிழ் நகரை சேர்ந்த சரிதா (17) ஆகியோர் தங்கிருந்தனர். கடந்த 11ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியே சென்று விட்டு வருவதாக காப்பாக பொறுப்பாளர் ராசிதா (58) என்பவரிடம் கூறிவிட்டு சென்ற சிறுமிகள், திரும்பி வரவில்லை. காப்பக நிர்வாகிகள் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து காப்பகத்தின் பொறுப்பாளர் ராசிதா சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமாக 2 சிறுமிகளை தேடி வருகின்றனர்.

Tags : girls ,police investigation ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்