×

குழந்தை யேசு ஆலய திருத்தேர் ஊர்வலம்: கலெக்டர் பங்கேற்பு

செங்கல்பட்டு ஜன. 13:  செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியில் குழந்தை யேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 9ம் தேதி செங்கல்பட்டு புனித யோசேப்பு பேராலய பங்கு பணியாளர் எ.மைக்கல்ராஜ் தலைமையில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து தினந்தோறும் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து நேற்று மாலை  திருத்தேர் பவனி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் கலந்து கொண்டு திருத்தேர் பவனியை துவங்கி வைத்தார். இதனையடுத்து இந்த திருத்தேரானது வல்லம், மேலமையூர் சக்தி நகர், சாந்திநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வந்து மீண்டும் குழந்தை யேசு ஆலயத்தை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வல்லம் குழந்தை யேசு ஆலய பங்கு தந்தை திமொதி உள்ளிட்ட செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Infant Jesus ,Jesuit ,Procession: Collector's Participation ,
× RELATED திருச்சி பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு