×

செங்கல்பட்டில் வித்யாசாகர் பள்ளி ஆண்டு விழா: எஸ்.பி பங்கேற்பு

செங்கல்பட்டு, ஜன. 13: செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நவ்யா 12வது ஆண்டு விழா நேற்று நடந்தது. வித்யாசாகர் கல்வி குழும தலைவர் அஸ்திமல் சுரானா, தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் கண்காரியா, கல்வி குழும தாளாளர் விகாஸ் சுராணா, இயக்குனர் ஆச்சார்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவிந்தராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக மாணவி அபிநயா தேவி அனைவரையும் வரவேற்றார்.

செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன், சென்னை லாலாஜி மெமோரியல் சாகர் சர்வதேச பள்ளியின் முதல்வர் பவானிசாகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், கருத்தரங்கு, நடைபெற்றது. விழாவில் குளோபல் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Vidyasagar School Anniversary ,Chengalpattu ,
× RELATED நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு...