காரைக்குடி, ஜன.13: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சிபிஎஸ்இ இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மூத்த முதல்வர் புவனாசங்கர் வரவேற்றார். கல்விக்குழும தலைவர் சத்தியன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன் விழாவை துவக்கி வைத்தார். பட்டிமன்ற பேச்சாளர் ஸ்டீபன் மைக்கேல் ராஜ் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து விளக்கினார். தமிழர் பாரம்பரிய முறைப்படி மாணவர்களுக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல், பம்பரம் சுற்றுதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஷ்வரி, தமிழ்த்துறை தலைவர் ஜான்போஸ்கோ, கலைத்துறை தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.