×

விவேகானந்தா கல்லூரி வளாக நேர்முகத் தேர்வு

காரைக்குடி, ஜன.13: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ரானே மற்றும் சக்தி ஆட்டோ கம்பொனன்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் வளாக நேர்முகத் தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்து துவக்கிவைத்தார். ரானே நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாதவன், சக்தி காம்பொனன்ட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் பகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இயந்திரவியல் துறை மற்றும் மெக்கட்ரானிக்ஸ் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். நேர்காணலில் தேர்வு பெற்ற 46 மாணவர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மெக்கட்ரானிக்ஸ் துறைத் தலைவர் சோலையன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்