×

ஊரணியில் மூழ்கி வாலிபர் பலி

கீழக்கரை, ஜன.13:  கீழக்கரை அருகே சின்ன மாயாகுளம் பாரதி நகரை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மோகன் தாஸ் (24). இவர் நண்பர்கள் முள்ளூவாடியைச் சேர்ந்த லோகுவருண் மற்றும் சின்னமாயா குளத்தை சேர்ந்த அருண் ஆகியோருடன் மேலக்கரை ஊரணியில் நேற்று முன்தினம் குளிக்க சென்றுள்ளனர். இவர்களில் மோகன்தாஸ் ஊரணியில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. நேற்று அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஏர்வாடி தர்ஹா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்