×

காந்தி மார்க்கெட் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் முசிறி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய 3 டிராக்டர், பொக்லைன் பறிமுதல் வருவாய்த்துறயினர் போலீசார் அதிரடி

முசிறி, ஜன.13: முசிறி அருகே அனுமதியின்றி செம்மன் கடத்திய 3 டிராக்டர், ஒரு பொக்லைனை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். முசிறி அருகே வீரமணிப்பட்டி பகுதியில் பண்ணைக்குட்டையில் இருந்து செம்மண் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி சப்-கலெக்டர் பத்மஜா, தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து ஆமூர் வருவாய் ஆய்வாளர் கண்ணன், ஆமூர் கிராம நிர்வாக அலுவலர் விஜய் ஆகியோர் வீரமணிப்பட்டி பகுதியில் உள்ள பண்ணைக்குட்டைக்கு போலீசாருடன் சென்றனர். அங்கு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 3 டிராக்டர்களில் செம்மண்ணை கூலித்தொழிலாளர்கள் அள்ளிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் பலர் தப்பி ஓடினர்.

இந்நிலையில் போக்குவரத்து ரோந்து போலீசார் உதவியுடன் 3 டிராக்டர்கள் மற்றும் 1 பொக்லைன் இயந்திரத்தைய பறிமுதல் செய்து முசிறி போலீசார் வசம் ஒப்படைத்தனர். மேலும் செம்மண் திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் விஜய் முசிறி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செம்மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : police raid ,cleaning workers road ,Musiri ,
× RELATED சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு