திருச்சி, ஜன.13: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வானையம் சார்பில் காவல்துறையில் 5 ஆண்டுகள் பணிநிறைவு செய்த தகுதியுடைய காவல் ஆளினர்கள், உதவி ஆய்வாளர்கள் எழுத்து தேர்வு கடந்த 11ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக 11ம் தேதி நடக்க இருந்து தேர்வு மாற்றப்பட்டது. தற்போது இந்த தேர்வு இன்று (13ம் தேதி) நடக்கிறது.