×

கல்லூரி பட்டமளிப்பு விழா திருச்சி அருகே முடிகண்டத்தில் நள்ளிரவில் பரபரப்பு திமுக ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல் ஊராட்சி அலுவலகத்தில் கணவருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்

திருச்சி, ஜன.13: திருச்சி அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அவர் ஊராட்சி அலுவலகத்தில் கணவருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி அடுத்த மணிகண்டம் ஒன்றியம், ஓலையூர் அருகே முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் சின்னதம்பி மனைவி ஜான்சிராணி. இந்நிலையில் இவரது ஊராட்சிக்குட்பட்ட துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையில் சாலை அமைக்கும் பணிக்காக திருமலைசமுத்திரம் குளத்தில் இருந்து மண் எடுத்து சென்றவர்களை அதிமுகவினர் தடுத்து கமிஷன் கேட்டதாக தெரிகிறது. இவர்களிடம் முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவி ஜான்சிராணி பேச்சுவார்த்தை நடத்தி தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிலர் இவரை தாக்கியதால் காயம் அடைந்தார். இதையடுத்து உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஓலையூரிலுள்ள முடிகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவி ஜான்சிராணி தனது கணவருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்ற மணிகண்டம் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tags : College Graduation Ceremony ,Trichy ,
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா