×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவாரூரில் விடுதியில் அழுகிய ஆண் சடலம் அடித்து கொலையா? போலீசார் விசாரணை

மன்னார்குடி, ஜன. 13: திருவாரூரில் தங்கும் விடுதி ஒன்றின் அறைக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் என்பவரது மகன் இளம்பரிதி (35) கூலித்தொழிலாளி. இவருக்கு கனிமொழி (24) என்ற மனைவியும், சுமார் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது. இதில் கனிமொழி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இளம்பரிதி திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் இளம்பரிதி தங்கியிருந்த அறையில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருவாரூர் டவுன் போலீசார் இளம்பரிதி தங்கியிருந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் அறைக்குள் இளம்பரிதி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதனை தொடர்ந்து அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பரிதி உடலில் கை மற்றும் கால் பகுதிகளில் ரத்தம் உறைந்து காணப் பட்டுள்ளது. எனவே அவர் இறந்து 2 அல்லது 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. அவரது உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் இளம்பரிதி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : male ,Marxist Communist Party ,Tiruvarur Police ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...