×

டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட முயற்சி 14 பேர் கைது

தஞ்சை, ஜன. 13: தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர். சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் விடுமுறை அறிவிக்கவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பு அறிவித்தது.

இதன்படி தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் சுகுமார் தலைமையில் மாவட்ட தலைவர் பிரபு, நகர செயலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பூக்கார தெருவில் உள்ள முருகன் கோயில் அருகிலிருந்து நேற்று பிற்பகல் ஊர்வலமாக புறப்பட்டனர். டாஸ்மாக் கடை அருகே சென்ற இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 14 பேரை கைது செய்தனர்.

Tags : task force shop ,
× RELATED தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை...