×

விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் 12ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சை, ஜன. 13: தஞ்சை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மனிதநேய கல்வியாளர் கணேசனின் 12ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடந்தது. பாரத் கல்வி குழுமங்களின் செயலாளர் புனிதா கணேசன் பங்கேற்று கணேசன் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதைதொடர்ந்து நிறுவனரின் புதல்வர் விக்ரம் சூரியபிரசாத் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கல்லூரி இயக்குனர் வீராசாமி, முதல்வர் குமார், இந்தியன் இன்ஸ்டிடியூட் முதல்வர் முத்துகிருஷ்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் சுபத்ரா, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செந்தாமரை, மேலாண்மை நிறுவன இயக்குனர் சுவாமிநாதன், பாரத் கல்லூரி துணை முதல்வர்கள் அறவாழி, ராஜராஜேஸ்வரி மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் துணை முதல்வர் கவிதா. மக்கள் தொடர்பு அதிகாரி கணேசன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனமான திருவோணம் நவினா மேல்நிலைப்பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மேலாளர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மேலும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் ரத்ததான முகாம் செயலாளர் புனிதா கணேசன் மற்றும் மருத்துவர் ராதிகா மைக்கேல் முன்னிலையில் நடந்தது. 27 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.

Tags : Founder ,Vishwa Hindu Parishad ,Bharat Educational Groups ,
× RELATED ரமலான் பண்டிகை கோலாகலம் ; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை