×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி

பழநி, ஜன. 13: பழநி அருகே மானூரைச் சேர்ந்தவர் ராமசாமி (55). விவசாயி. நேற்று முன்தினம் தனது பைக்கில் வாகரைக்கு சென்று கொண்டிருந்தார். தாராபுரம் நெடுஞ்சாலையில் புளியம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ராமசாமியின் பைக் மீது மோதியது. இதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீரனூர் போலீசார் ராமசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...