×

உஞ்சினியில் மக்கள் குறைதீர் முகாம்

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 13: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா உஞ்சினி கிராமத்தில் தமிழக முதல்வரின் அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்திட்ட தனி துணை ஆட்சியர் ஸ்டெல்லா ஞானமணி பிரமீளா தலைமை வகித்தார். பூதலூர் தாசில்தார் சிவகுமார் வரவேற்றார். பூதலூர் சமூக பாதுகாப்பு நலத்திட்ட தனித்துணை வட்டாட்சியர் ராமலிங்கம், வட்ட வழங்கல் அலுவலர் பழனிவேல், தலைமை நிலஅளவர் சத்தியபாமா முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களிடம் 11 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விஏஓ ஜூலியட் ராஜகுமாரி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags : Overcrowding Camp ,
× RELATED அத்தியூரில் நாளை மக்கள் குறைதீர் முகாம்