×

ஓய்வூதியர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

பேராவூரணி, ஜன. 13: பேராவூரணி வட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சங்க தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். செயலாளர் மணி, பொருளாளர் கோவிந்தன், துணை தலைவர் புலவர் போசு முன்னிலை வகித்தனர்.
முகாமில் கண்ணில் நீர் வடிதல், நீர் அழுத்தம், பார்வைத்திறன் குறைபாடு, விழித்திரை பாதிப்பு, கண் புரை உள்ளிட்ட கண் குறைபாடுகளுக்கு திருச்சி மகாத்மா காந்தி கண் மருத்துவமனை கண் மருத்துவர் அசோக் தலைமையில் 12 மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். முகாமில் 80 ஓய்வூதியர்கள் பங்கேற்றதில் 5 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : eye treatment camp ,pensioners ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்