×

சித்தேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 13: திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி சித்தேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இக்கோயில் திருக்காட்டுப்பள்ளி, திருநியமம், திருச்சினம்பூண்டி, திருக்கானூர், திருப்பொதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை ஆகிய 7 சிவன் கோயில்களை உள்ளடக்கி சப்தஸ்தான (ஏழுர்) திருவிழா நடந்த சிவத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பழமையான ராமாயண காட்சிகள் அற்புத சிற்பங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளதால் யுனஸ்கோ பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு தினசரி பூஜைகளும், பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடும் நடக்கிறது. மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் புது வஸ்திரம் அணிவித்து புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Purnami ,Siddheshwar Temple ,
× RELATED முத்தான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு..!!