×

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

திண்டுக்கல், ஜன. 13: திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு அன்றைய தினங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1. உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் மற்றும் மதுபான விற்பனைத் தலங்கள் அனைத்தும் 16.01.2020 (வியாழக்கிழமை) - திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் ஆகிய நாட்களில் மூடப்பட வேண்டும். அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,liquor stores ,Thiruvalluvar ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...