×

அரியலூர் பகுதியில் அட்மா திட்ட செயல்பாடுகள் ஆய்வு

அரியலூர், ஜன. 13: செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள அட்மா திட்டத்தின் செயல்படுத்தப்படும் செயல்பாடுகளை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
அப்போது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை செயல்விளக்க திடல், மண்புழு உர உற்பத்தி செயல்விளக்க திடல், சம்மங்கியில் பாலித்தீன் தாள் கொண்டு நில போர்வை அமைத்த செயல்விளக்க திடல், விதை விதைக்கும் நிலக்கடலை கருவி கொண்டு நிலக்கடலை செயல்விளக்கம் திடல், காய்கறிகளை தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பெட்டிகள், சோலார் மின்விளக்கு பொறி செயல்விளக்க திடல் மற்றும் அங்கங்க பண்ணையம் செயல்விளக்க திடல் ஆகிய திட்டங்களை பார்வையிட்டனர்.

பின்னர் விவசாயிகளுக்கு உற்பத்தி முறைகள் மற்றும் நவீன யுக்தி முறைகள், லாபம் ஈட்டும் முறைகள் குறித்து எடுத்து கூறினார். ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Adma Project Operations ,Ariyalur Area ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா