சீர்காழி, ஜன.13: சீர்காழி அருகே 108 வைணவ கோயில்களில் ஒன்றான மணிமாடக் கோயில் மார்கழி மாத உற்சவ விழா நடைபெற்றது.
சீர்காழி அருகே 108 வைணவத் தலங்களில் ஒன்றான நாங்கூர் மணிமாடக் கோயிலில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாள் தாயாருடன் கூடார வெல்லி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.