×

பூம்புகார் ஊராட்சியில் பன்றிகளை அப்புறப்படுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

சீர்காழி, ஜன.13: சீர்காழி அருகே பூம்புகார் ஊராட்சியில் பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு 7 தினங்களுக்குள் பன்றிகளை அப்புறப்படுத்தகோரி பொது சுகாதாரத்துறை சட்டப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் ஊராட்சி தருமகுளம் வெள்ளையினிருப்பு தெருவில் வசித்து வரும் ராசப்பன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் பன்றிகளை வளர்த்து வருகிறார். அதே பகுதியில் வயல்வெளிகளும் இருப்பதால் இதனை அறிந்த சுகாதார ஆய்வாளர் வட்டார சுகாதாரத்துறை சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்றிகள் வளர்க்கும் உரிமையாளரிடம் குடியிருப்பு பகுதியில் பன்றி வளர்ப்பதினால் ஏற்படும் சுகாதார சீர்கேடு, மூளைக்காய்ச்சல் மற்றும் பூச்சிகள் மூலம் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் ஊருக்கு வெளியே குடியிருப்பு இல்லாத பகுதிகளில் பட்டிகட்டி வளர்த்துக்கொள்ள இரண்டு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்தும் பன்றிகளை அப்புறப்படுத்தாதால் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் தலைமையில் பன்றி உரிமையாளர்களுக்கு 7 தினங்களுக்குள் பன்றியை அப்புறப்படுத்த பொது சுகாதாரத்துறை சட்டப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்போது சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், ரெங்கராஜன், ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : owners ,Poompuhar ,
× RELATED ரத்னம் படத்திற்கு தியேட்டர்...