×

கிள்ளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்டம்

கீழ்வேளூர், ஜன.13: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கிள்ளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்ட தொடக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்து தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் செங்குட்டுவன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது பள்ளி பரிமாற்று திட்டம் மற்றும் நோக்கம் குறித்து ஹலியாபானு பேசினார். ஆசிரியர் கலைச்செல்வி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில உரையாடல், ஆங்கில நாடகம் குறித்து பயிற்சி அளித்தார். அறிவியல் ஆசிரியர் சந்திரசேகர் எளிய அறிவியல் பரிசோதனை குறித்து விளக்கினார்.

அதைத் தொடர்ந்து மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பாடல், ஆடல், யோகா, சிலம்பம் ஆகியவை நடத்தி காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிள்ளுக்குடி அஞ்சல் அலுவலகத்தை பார்வையிட்ட மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், பணம் அனுப்பும் முறை பதிவு அஞ்சல் அனுப்பும் முறையும், அதற்கான எடைகளுக்கு தகுந்தாற்போல் தொகை நிர்ணயம் மறறும் அஞ்சலக செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆறுமுகம், அறிவுடைநம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Killukudi Government High School ,
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்