×

அமைச்சர் பேச்சு செம்பனார்கோவிலில் வட்டார அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம்

தரங்கம்பாடி, ஜன.13: நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் ஊரக வட்டார அலுவலர்களுக்கான திட்ட விளக்கக்கூட்டம் நடைபெற்றது. செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற திட்டவிளக்க கூட்டத்தில் இளம் தொழில் வல்லுநர் செல்வி பிருந்தா வரவேற்றார். இதில் வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் 57 ஊராட்சிகளின் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட தொழில் மைய இயக்குநர், வட்டார மருத்துவ அலுவலர், வேளாண்துறை துணை இயக்குநர், தோட்டக்கலை துறை இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டம் குறித்த திட்ட விளக்கவுரையை மாவட்ட செயல் அலுவலர் செல்வம் தெளிவாக எடுத்துக் கூறினார். திட்டத்தின் நோக்கம், கூறுகள், திட்டம் யாருக்காக, திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தெளிவாக விளக்கப்படங்கள் மூலமும், கலைநிகழ்ச்சி மூலமும் விளக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் செயல்அலுவலர்கள், வட்டார அணித்தலைவர்கள் மற்றும் திட்டப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் அன்புநிதி நன்றி கூறினார்.

Tags : Speech Project Meeting ,Regional Officers ,Chembanarkovil ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்