×

செங்கரும்புகளை எதிர்பார்த்த விலைக்கு அரசு கொள்முதல் செய்யவில்லை விவசாயிகள் ஏமாற்றம் நாளை போகி பண்டிகை :காற்றின் தரத்தை பாதுகாக்க பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்

கரூர், ஜன. 13: நாளை போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. காற்றின் தரத்தை பாதுகாக்க பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. கரூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பொங்கல் பண்டிகைக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

ஆனால், தற்போது நாளை, போகிப் பண்டிகையின் போது, பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதனால், வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு விபத்துக்களும் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.எனவே, போகிப்பண்டிகையின போது, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் .இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா