×

கரூர் தெற்கு மடவளாக மூட்டை மூட்டையாக கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு


கரூர், ஜன. 13: கரூர் தெற்கு மடவளாக பகுதியோரம் உணவக குப்பைகள் கொட்டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் பசுபதீஸ்வரா கோயில் பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதில் தெற்கு மடவளாகம் பகுதியின் வழியாகவும் சுற்றுச்சுவர் செல்கிறது. இந்நிலையில் தெற்கு மடவளாக பகுதியில் பல்வேறு உணவகங்களின் குப்பைகள் மூட்டை மூட்டையாக கொட்டி விட்டு செல்வதால் இந்த பகுதி முழுதும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கரூர் நகராட்சி முழுதும் திடக்கழிவு மேலாண்மை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற செயல்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு தேவையான தடைகளை விதிக்க துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் அல்லது கொட்டப்படும் குப்பைகள் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Karur ,south ,
× RELATED பணப் பட்டுவாடா விவகாரம்; தேமுதிக...