×

நோயால் கடும் அவதி மூதாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை

கரூர், ஜன. 13: வெள்ளியணை அருகே நோயினால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள தாளியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமாயி(65). கணவர் இல்லாத நிலையில் பல ஆண்டுகளாக தனித்து வாழ்ந்து வந்த இவர், சில மாதங்களாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் மதியம், சின்னான்டிபட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்து உயிருக்கு போராடினார்.இது குறித்து கரூர் தீயணைப்புத்துறையினருக்கு இந்த பகுதி மக்கள் தகவல் தந்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் விழுந்த மூதாட்டியை சடலமாக மீட்டனர்.இது குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை