×

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சிக்கினான்

பெரம்பூர்: வியாசர்பாடி முல்லைநகர் மேம்பாலம் அருகே எஸ்ஐ பிரேம்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி, பைக்கை திருப்பிக்கொண்டு வேகமாக சென்றார். போலீசார் பைக்கில் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், வியாசர்பாடி, மகாகவி 16வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி ரசூல்கான் (38) என்பதும், இவர் மீது, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் கரீம் என்பவரை கடத்திய வழக்கு மற்றும் 2019ம் ஆண்டு போரூரில் ரூ.50 லட்சம் ஏமாற்றிய வழக்கு, 2018ல் பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி வழக்கு, 2014ல் திருவல்லிக்கேணியில் ரூ.25 லட்சம் கள்ளநோட்டு மாற்ற முயன்ற  வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. மேலும், கடந்த ஒன்றரை வருடமாக ரசூல்கான் தலைமறைவாக இருந்ததும் தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Rowdy ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...