×

வேன் மீது பஸ் மோதி 12 பேர் படுகாயம்

சென்னை: சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் சில நாட்களுக்கு முன்பாக சுற்றுலா வேனில் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி சர்ச்சுக்கு சென்றனர். தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். வேன் கிழக்கு கடற்கரை சாலையில் செய்யூர் அருகே ஓதியூர் கிராம பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென வேன் மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் வேன் டிரைவர் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து செய்யூர் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 12 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...