×

விவேகானந்தர் பிறந்த நாள் விழா

திருப்பூர், ஜன.13:  திருப்பூர் வடக்குநகர் மேற்கு பகுதி இந்து இளைஞர் முன்னணி சார்பில்  விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடினர். விழாவுக்கு,  மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாககுழு உறுப்பினர் சண்முகம் இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து பேசினார். இதில் இந்து முன்னணி இணையதள பொறுப்பாளர் முருகேசன், நகர துனை தலைவர் கார்த்தி, செயலாளர் அரவிந்த், மோகன்பிரசாந்த், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஹெல்மெட்டுடன் வாகன பேரணிக்கு வந்திருந்த இளைஞர்களுக்கு காவல் துணை ஆனையர் வெற்றி வேந்தன்  இனிப்பு வழங்கி பாராட்டினார்.

வாகன பேரணி குமார் நகரில் துவங்கி சிக்கண்ணா கல்லூரியில் முடிந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த  சுவாமி விவேகானந்தர் படத்திற்கு மாலை அணிவிந்து மரியாதை செய்தனர்.காங்கயம்: காங்கயம், அகிலாண்டபுரத்தில் வேர்கள் அமைப்பு மற்றும் சமூக சேவை இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் தின விழா நிகழ்வுக்கு வேர்கள் அமைப்பின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ராம்கோபால் ரத்தினம், சுவாமி விவேகானந்தர் படத்துக்கு மாலை அணிவித்து விளக்கவுரையாற்றினார். இதில் காங்கயம் பகுதியில் சமூக தொண்டாற்றும் இளைஞகளின் அறிமுகம், தாங்கள் செய்த நற்பணிகள் குறித்து கலந்துரையால் நடைபெற்றது. இதில் வேர்கள் அமைப்பினர், துளிகள், ரோட்டரி சங்கம், பசியைபோக்குவோம், தமிழ் நற்பணி மன்றம், பூக்கள், கலாமின் அக்னி சிறகுகள், மகாத்மா காந்தி அறக்கட்டளை, நிழல்கள் அறக்கட்டளை, நண்பர்கள் ரத்ததான குழு உள்பட பொதுமகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vivekananda Birthday Party ,
× RELATED விவேகானந்தர் பிறந்த நாள் விழா