×

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கூடலூர், ஜன.13: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை கவுண்டன் கொல்லி பகுதியை சேர்ந்வர்  மரகதம் என்பவரது மகன் பிரகாஷ்(22). கூலித் தெழிலாளி. திருட்டு வழக்கு தொடர்பாக, போலீசார் அவரை மூன்று நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு பைக்கில் அழைத்து சென்றனர். அப்போது அவர் தேவன் நம்பர் 2 பகுதியில் பைக்கில் இருந்து தப்பியோடியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள  வாழைத்தோட்டத்தில் அவர் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் போலீசார் அவரை தாக்கி இருக்காலம் என கூறி கூடலூர் காவல் நிலையம் முன்பாக நேற்று முன்தினம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைக்க கவுண்டன் கொல்லி கிராமத்திற்கு போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது அங்கு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆர்டிஓ ராஜ்குமாரிடம் அவரது உறவினர்கள், புகார் அளித்தவர் மீதும், இறப்புக்கு காரணமான எஸ்.ஐ., மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தில் தந்தையும், மகனும் இறந்து விட்டதால் ஒரே மகளான ஜெயாவிற்கு அரசு வேலை வழங்க வேண்டும். உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து  அவர்கள் உடலை பெற்றுக் கொண்டனர்.

Tags : Relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...