கோவை, ஜன. 13: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது. கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், பொங்கல் விழா கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொங்கல் வைத்து, வழிபட்டனர். பின்னர், அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிர்வாகிகள் வீனஸ் மணி, பச்சைமுத்து, முன்னாள் மேயர் வெங்கடாசலம், கணபதி சிவக்குமார், திருமூர்த்தி, சவுந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, கு.பே.துரை, கருப்புசாமி, பாஸ்கர், இராம.நாகராஜ், குணசேகரன், கோவை போஸ், காந்தகுமார், ரங்கநாதன், ஜீகே., பரமசிவம், சண்முகம், மருதூர் செல்வராஜ், சுப்பு காமராஜ், கார்த்திக், ஆறுமுகம், சீனிவாசன், ஆரோக்கியசாமி, சவுந்தர்ராஜன், ரூபர்ட், பிரபு, கர்ணன், அசோக்குமார், கேபிள் வினோத், வேலுச்சாமி, ராணி, வசந்த், அசோக்குமார், விஜயகுமார், சஜய்சாந்த், ஆனந்த், தாரா, மரகதம், அனார்கலி, நாராயணன், ஜேம்ஸ், நாகராஜ், வேணுகோபால், ஜீவானந்தம், காமராஜ், கணேசன், ஜெகதீஷ், காமராஜ்துல்லா, ஜவஹர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.