×

கழிவு நீர் வெளியேற்றியதால் 3 சாயப்பட்டறைகள் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, ஜன. 13: ஈரோடு பகுதியில் கழிவு நீரை வெளியேற்றி வந்த 3 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பினை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். ஈரோடு, வைராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகளில் இருந்து, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக வெளியேற்றப்பட்டு வருவதாக மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து வைராபாளையம் பகுதியில் ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு சாயப்பட்டறையில் இருந்து நேரடியாக கழிவு நீர் வெளியேற்றப்பட்டதும், மேலும் இரு பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் செயல்படுத்தியதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து 3 ஆலைகளின் மின் இணைப்பையும், கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் துண்டித்தனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு