×

தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சேத்தியாத்தோப்பு, ஜன. 13: பூதங்குடியில் பழமை வாய்ந்த அம்மன் கோயிலில் மார்கழி மாத சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பூதங்குடி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோயிலில் மார்கழி மாத அதிகாலை சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி முன்னதாக கோயிலில் அமைந்துள்ள மூலவரான தீப்பாய்ந்த நாச்சியார் அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பன்னீர், பூக்கள், வெட்டிவேர்உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் தீப்பாய்ந்த நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன், நடராஜர், நவக்கிரகம், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து  மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Nachiyar Amman ,
× RELATED நாச்சியார் அம்மன் கோயிலில் ஜூலையில்...