×

கடலில் மூழ்கி மீனவர் சாவு

கடலூர், ஜன. 13: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி மீனவர் இறந்தார். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன்(41). நேற்று தனது நண்பர்களுடன் கடலூர் சில்வர் பீச் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென ராஜராஜன் உள்ளிட்ட 4 பேரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்து கரையில் இருந்தவர்கள் உடனடியாக கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து அருகில் இருந்த மீனவர்கள் நான்கு பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ராஜராஜன் சுயநினைவின்றி  மீட்கப்பட்ட நிலையில் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜராஜன் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

Tags : fisherman ,sea ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...