×

கடாட்சபுரம் பள்ளியில் புதிய கட்டிடம் பிரதிஷ்டை

நாசரேத், ஜன.13: கடாட்சபுரம் பள்ளியில் நடந்த புதிய கட்டிட பிரதிஷ்டை விழாவில் பேராயர் தேவசகாயம் பங்கேற்றார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் கடாட்சபுரம் றி.என்.டி.றி.ஏ ஜாண் தேவசகாயம் ஞாபகார்த்த நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பிரதிஷ்டை விழா நடந்தது. திருமண்டல லே செயலர் எஸ்.டி.கே.ராஜன் தலைமை வகித்தார். முதலூர் சுவி.தாவீது சுந்தரானந்தம் சபைமன்ற தலைவர் குரோவ்ஸ் பர்னபாஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். திருமண்டல ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின்ரஞ்சித்சிங் வரவேற்றார்.  தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் ஜெபித்து புதிய கட்டிடத்தை பிரதிஷ்டை செய்தார். சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரெத்தினாவதி வாழ்த்தி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் தொழிலதிபர் ஈசாக்கு ரத்தினபாண்டி, சேகர செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சுபாஷ், குருவானவர் பிரின்ஸ் மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். சேகரகுரு தினகரன் சாலமோன் நன்றி கூறினார்.

Tags : building ,Kathachapuram School ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி