×

கோயில் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம் திருட்டு

கோவில்பட்டி,ஜன.13: கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் கோயில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் துர்க்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வருபவர்சுந்தர். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார் .பின்னர் காலையில் பூஜை வைப்பதற்காக கோயிலுக்கு வந்தபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோயில் உள்ளே சென்று பார்த்தபோது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி, வெள்ளிக்கிரீடம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Temple ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு