×

மருநூத்து பஞ். துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

கோபால்பட்டி, ஜன. 12: மருநூத்து பஞ்சாயத்தில் தலைவராக தங்கவேல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நேற்று துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 9 வார்டு உறுப்பினர்களை கொண்ட பஞ்சாயத்தில் அஞ்சலிதேவி, பாலசுப்பிரமணி ஆகியோர் போட்டியிட்டனர். ஜெகநாத் என்பவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். உறுப்பினர் ஒருவர் இரண்டு வாக்குகள் அளித்ததால் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருளூத்து பஞ்சாயத்தில் துணைத் தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Tags : Vice President ,election ,
× RELATED ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து