×

திருவள்ளூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியின்றி திமுக வேட்பாளர் தேர்வு

திருவள்ளூர், ஜன. 12: திருவள்ளூர் ஒன்றியக் குழு பெருந்தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயசீலி ஜெயபாலன்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலிஜெயபாலன், திமுக மாவட்ட பிரதிநிதி ச.ஜெயபாலன் ஆகியோருக்கு 26 வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவருமான சதாபாஸ்கரன், வக்கீல் பாஸ்முருகன் ஆகியோர் ஆளுயர மாலை மற்றும் கிரீடம் அணிவித்து வாழ்த்தினர்.

இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன் மற்றும் வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன், சி.பாஸ்கர், ஜெ.குணபாலன், என்.எல்.கே.நரசிம்மன்,  வக்கீல் எஸ்.பிரேம்குமார், கே.குட்டியப்பன், ஆர்.மோகன், எம்டிசி பால்தாஸ், துரைசுகுமாரன், எம்.டி.சி.டி.ரமேஷ், வி.கருணாநிதி, எம்.பாபு, ஆர்.சிகாமணி, டி.தீபன், பி.சாந்தகுமார், வி.அமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : candidate ,DMK ,union committee ,Thiruvallur ,
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...