×

பொங்கல் பரிசு தொகையில் சரக்கடித்துவிட்டு ஸ்குரு டிரைவரால் பெயின்டர் குத்திக் கொலை

* ஆட்டோ டிரைவருக்கு வலை
* மறைமலைநகரில் பரபரப்பு

செங்கல்பட்டு, ஜன.12: மறைமலைநகரில் நள்ளிரவில் குடிபோதையில், கூலி தொழிலாளி  ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் குமார் (எ) பெண்டு குமார் (40). பெயின்டர். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், அடிக்கடி குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அவரது மனைவி பவானி, கடந்த சில நாட்களுக்கு முன், கணவனுடன் கோபித்துக்கு கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சிவகுமார். ஆட்ேடா டிரைவர். இவரும், குமாரும் சில நேரங்களில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் குமார், பொங்கல் பரிசு தொகுப்பாக ₹1000 வாங்கியுள்ளார். அந்த பணத்தை எடுத்து கொண்டு, சிவக்குமாருடன் சென்று மது குடித்துள்ளார்.  போதை தலைக்கேறியதும், சிவக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த சிவகுமார், ஆட்டோவில் இருந்த ஸ்குரூ டிரைவரை எடுத்து, குமாரின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். ரத்தம் கொட்டியதும் குமார், அலறி துடித்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் ஓடி வந்தனர். அதை பார்த்ததும் சிவக்குமார், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சிவகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அவரை பிடித்த பிறகு, எதற்காக குமார் கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சிவகுமார் மீது, ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Painter ,death ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை