×

பட்டப்பகலில் வீட்டை உடைத்து 18 சவரன் திருடிய ரவுடி கைது: சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்

மதுராந்தகம், ஜன. 12: பட்டப்பகலில் வீட்டை உடைத்து 18 சவரன் நகைகளை கொள்ளையடித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை எஸ்எம்பி கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன். கடந்த நவம்பர் 15ம் தேதி பட்டப்பகலில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.புகாரின்படி ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ரவுடி பிரகாஷ், நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த பிரகாஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து 18 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவை உள்ளன. தற்போது மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் தங்கி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார் என தெரிந்தது.

Tags : Rowdy ,house ,
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது